March 16, 2025
Uncategorized

மத ரீதியான இடங்களில் பாஜக தொடர் தோல்வி: இந்தியா கூட்டணி

மக்களவைத் தேர்தலில் தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் மதம் தொடர்புடைய இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளதாக சமாஜவாதி கட்சி விமர்சித்துள்ளது. 7 மாநிலங்களிலுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூலை 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இந்தியா கூட்டணி 10 இடங்களிலும் (காங்கிரஸ் -4, திரிணமூல் காங்கிரஸ் -4, திமுக -1, ஆம் ஆத்மி -1) பாஜக 2 இடங்களிலும், சுயேட்சை ஒருவரும் வெற்றி

Read More
Uncategorized

அமெரிக்க அதிபர்கள்: படுகொலைகளும், கொலைமுயற்சிகளும்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நேற்று (ஜூலை 13) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் காதில் குண்டு பட்டு காயமடைந்துள்ளார். துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் நபரை அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டிரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்கா ஒரு தேசமாக உருவானதிலிருந்து இதுவரை அமெரிக்க அதிபர்கள் மற்றும்

Read More
Uncategorized

சஞ்சு சாம்சன் அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 168 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார், இந்திய அணி முதலில் பேட் செய்தது. அம்பானி இல்லத் திருமண விழாவில் எம்.எஸ்.தோனியுடன் நடிகர் மகேஷ் பாபு! தொடக்க

Read More
Uncategorized

அதீத நம்பிக்கையே மக்களவைத் தோத்தலில் பாஜவுக்கு பாதிப்பு: யோகி ஆதித்யநாத்

லக்னௌ: அதீத நம்பிக்கையால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் மாநிலத்தில் காலியாகவுள்ள 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் 2027-இல் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் வெற்றிபெற அனைவரும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தோத்தலுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற முதல் மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: மக்களவைத் தோ்தலில் கணிசமான வாக்குகளை பாஜக பெற்றிருந்தாலும் மற்ற கட்சிகளுக்கும் இந்த முறை

Read More
Uncategorized

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது: தமிழக அரசு

சென்னை: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்வதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2021-இல் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல புதிய திட்டங்களை நிறைவேற்றி, அதில் தொடர்ந்து வெற்றிக் கண்டு வருகிறாா்.மகளிா், மாணவா்கள், தொழிலாளிகள், விவசாயிகள், மீனவா்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் அவா் நிறைவேற்றி வரும் திட்டங்களை அயல்நாடுகளையும் ஈா்த்து வருகின்றன. மகளிா்,

Read More
Uncategorized

புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மீண்டும் திறப்பு

ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று(ஜூலை 14ஆம் தேதி) திறக்கப்பட்டது. கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. அண்மையில் நடந்து முடிந்த ஒடிசா பேரவைத் தோத்தலில் இது மிகப்பெரும் அரசியல் விவகாரமாக உருவெடுத்தது. இதையடுத்து, 46 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 14-ஆம் தேதி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கக்கோரி மாநில அரசுக்கு உயா்நிலைக் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

Read More
Uncategorized

11,500 கன அடிக்கு பதில் 8,000 கன அடி நீர் திறக்க முடிவு!

தமிழ்நாட்டிற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் திறப்பதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவுறுத்திய நிலையில், கர்நாடக அரசு இம்முடிவை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (ஜூலை 14) நடைபெற்றது. இதில் பாஜக

Read More
Uncategorized

கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தூய்மைப் பணியாளர்: மீட்க முடியாத நிலை!

கேரளத்தில் கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தூய்மைப் பணியாளரை மீட்கும் பணி 24 மணி நேரமாகி நீடித்து வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஜோய். 42 வயதான இவர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் தம்பனூர் பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தேங்கி உள்ள கழிவுகள் மத்தியில் சிக்கினார். அவருடன் பணிபுரிந்தவர்கள் தகவலின்பேரில், மாநகராட்சி

Read More
Uncategorized

46 ஆண்டுகளுக்குப் பின் புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

பொக்கிஷ அறையில் இருந்த வைரம், வைடூரியம், தங்கம் உள்ளிட்ட நகைகள் கணக்கெடுக்கும் பணியில் சேர்ந்தார். புரி கோயில் பொக்கிஷ அறை கடைசியாக கடந்த 1978-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இப்போது 46 ஆண்டுகளுக்குப் பின் பழுதுபார்ப்பு மற்றும் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இதர பழங்காலப் பொருள்களை முழுமையாகப் பட்டியலிடும் பணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோத்தலில் புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையைத் திறக்கும் விவகாரம், முக்கிய அரசியல் பிரச்னையாக எதிரொலித்தது

Read More
Uncategorized

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு – காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி ஊடுருவிய 3 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். சமீபத்தில் குல்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நுழைந்தபோது தாக்குதல் நடத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்த நிலையில், எல்லைப் பகுதியில் கணிசமான அளவு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து குப்வாரா பகுதிக்குட்பட்ட கேரன் செக்டாரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Read More
X