இந்திய கடற்படையின் 10+2 (பி.டெக்) திட்டத்தின் கீழ் இலவச பி.டெக் படித்து முடித்து இந்திய கடற்படை அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அதிகாரி (நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் கிளை)
காலியிடங்கள்: 40
வயதுவரம்பு: 2.7.2005-க்கும் 1.1.2008-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் JEE முதன்மைத் தேர்வு – 2024 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஜேEE முதன்மைத் தேர்வு – 2024 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
Leave feedback about this