புதுதில்லி: ‘அவசரநிலை தவறை’ அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே ஒப்புக்கொண்ட நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பிரச்னையை எழுப்பியதற்காக பாஜகவைச் சாடிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரநிலை உரிமைகள் மற்றும் தவறுகள் குறித்து விவாதித்ததில் என்ன பயன் என்று கேள்வி எழுப்பப்பட்டது, அதே நேரத்தில் ‘கடந்த காலங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ‘ என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில், ‘1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இதே நாளில் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தி பாபாசாகேப் அம்பேத்காா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்படி அமல்படுத்திய அந்த முடிவை இந்த அவை கடுமையாக கண்டிக்கிறது.
அவசர நிலையை எதிா்த்து, போராடி, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றிய அனைவரின் உறுதியையும் இந்த அவை பாராட்டுகிறது என்ற தீர்மானத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வாசித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினா்கள் எழுந்து நின்று எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலை என்பது ஒரு தவறு என்றும், அவசரநிலையின் 50 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதி’சம்விதான் ஹத்யா திவாஸ்’என்ற பெயரில் அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், உறுப்பினர்களான ப.சிதம்பரம், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தற்போது நாட்டில் உள்ளவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 1975-க்குப் பிறகு பிறந்தவர்கள். அவசரநிலை ஒரு தவறு, இதனை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது இதே போல் ஒரு அவசரநிலையை அவ்வளவு எளிதில் திணிக்க முடியாத வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
Leave feedback about this